Theme Check

பிரபல நாட்டில் சோகம்.. நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி.. 100 பேர் காயம்..!

பிரபல நாட்டில் சோகம்.. நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி.. 100 பேர் காயம்..!

பிரபல நாட்டில் சோகம்.. நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி.. 100 பேர் காயம்..!
X

பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் சயோ பலோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
Death toll from landslides, flooding climbs to 24 in Brazil
இதற்கிடையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், சயோ பலோவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
Rain-fed landslides, flooding kill at least 19 in Brazil - ABC News
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story
Share it