செங்கம் அருகே சோகம்.. டிராக்டர் மோதியதில் 7 மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை பலி..!
செங்கம் அருகே சோகம்.. டிராக்டர் மோதியதில் 7 மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை பலி..!

திருவண்ணாமலை அருகே, இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 7 மாத கர்ப்பிணி மற்றும் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தான கவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்த ராஜதுரை (30). இவர், ஏழு மாத கர்ப்பிணியான தனது மனைவி மணிமேகலை(25) மற்றும் ஒன்றரை வயது குழந்தை துரைமணி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தார்.
முத்தனூர் அருகே சென்றபோது, இவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், ராஜதுரை படுகாயம் அடைந்தார். குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
உயிருக்கு போராடிய மணிமேகலை, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து புதுப்பாளையம் துணை காவல் ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

