தொடரும் சோகம்.. நாளை முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல் !!
தொடரும் சோகம்.. நாளை முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல் !!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது.
அதேடுமட்டுமல்லாமல் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும் வசதிப்படைத்தவர்கள், அரசு ஊழியர்கள் பெரியளவில் பாதிப்பு இன்றி தப்பிவந்தனர். ஆனால் நிலைமை மேலும் மோசமடைவதால் அவர்களுக்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் மூட அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மேலும் கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை வாழ்வாதார நெருக்கடி மேலும் கொடூரமாகி வருகிறது.
newstm.in