Theme Check

காத்துக் கொண்டிருக்கிறோம்.. பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்..!

காத்துக் கொண்டிருக்கிறோம்.. பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்..!

காத்துக் கொண்டிருக்கிறோம்.. பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்..!
X

“பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொறுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக பாஜக.

இந்நிலையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து, அதில் 6 பேரை கைது செய்துள்ளது திமுக அரசு.

கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக செய்து வருகிறது. எங்கள் நிர்வாகிகள் சிறையில் இருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க தமிழக பாஜக தயாராக இருக்கும்.

பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும் வரை காத்துக் கொண்டிருக்கிறோம்..!” என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Next Story
Share it