அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழித்துவிட்டோம்.. ரஷ்யா !!
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழித்துவிட்டோம்.. ரஷ்யா !!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல சிறிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. எனினும் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறது.
ரஷ்ய தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தனது முடிவில் இருந்து ரஷ்யா பின்வாங்கவில்லை. உக்ரைனின் பல நகரங்கள், அங்கிருந்த கட்டிடங்கள் உருக்குலைந்துள்ளன. இதனிடையே, உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் பணம், ஆயுதங்களை வழங்கி வருகிறது.
அதாவது, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை தீவிரப்படுத்தியது. ரஷ்ய ராணுவம் அந்த ஆயுதங்கள் வரும் வாகனங்களை இடைமறித்து அழிக்க முயற்சிக்கிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது மற்றும்ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மேற்கொண்டன.
இந்த நிலையில், உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் கூறி உள்ளது. கப்பலில் இருந்து ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
newstm.in