என்ன தைரியம்.. மனைவியிடமே நகையை ஆட்டைய போட்ட கணவர்.. பின்னர் நடந்த விபரீதம் !

என்ன தைரியம்.. மனைவியிடமே நகையை ஆட்டைய போட்ட கணவர்.. பின்னர் நடந்த விபரீதம் !

என்ன தைரியம்.. மனைவியிடமே நகையை ஆட்டைய போட்ட கணவர்.. பின்னர் நடந்த விபரீதம் !
X

வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்கள் கடந்த காலமாக அதிகரித்து வருகிறது. இந்த வழக்குகளில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான அதிகளவில் செய்திகளை கேள்விபட்டிருப்போம்.

ஆனால், இங்கு மனைவியையே ஏமாற்றி வீட்டில் இருந்த நகை, பணம் திருடியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்டனமல்லி ஸ்ரீநகரை சேர்ந்தவர் ப்ரீத்து (30). இவரது கணவர் அலிசன் (41). இவர், ரேஷன் கடையில் பறக்கும் படையில் பணியாற்றி வருகிறார்.

arrested

அலிசன் தினமும் குடித்து வந்து மனைவி ப்ரீத்துவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், ப்ரீத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அலிசன், ப்ரீத்துவிடம் இருந்த 15 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாயை திருடி சென்றார். நகை, பணம் காணாமல் போனதால் அதிர்சசி அடைந்த மனைவி ப்ரீத்து, இதனை கணவர் தான் திருடியிருக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின்படி, ஆவடி மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த அலிசனை நேற்று கைது பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it