நடிகை மீனாவின் கணவருக்கு உண்மையில் என்ன ஆனது? - குஷ்பு உருக்கம் !!

நடிகை மீனாவின் கணவருக்கு உண்மையில் என்ன ஆனது? - குஷ்பு உருக்கம் !!

நடிகை மீனாவின் கணவருக்கு உண்மையில் என்ன ஆனது? - குஷ்பு உருக்கம் !!
X

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மறைவுக்கு நடிகை குஷ்பு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் கடந்த சில மாதங்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நுரையீரலை மாற்ற வேண்டிய அளவுக்கு அவரது நிலைமை மோசமடைந்ததால் சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.
வித்யாசாகரின் மரணம் ஒட்டு மொத்த திரைத்துறையையும் பெரும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. வித்யா சாகரின் மறைவுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

meena

நடிகை மீனா - வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். தெறி படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நைனிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரங்கல் செய்தியில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நடிகை மீனாவிற்கு எனது குடும்பத்தினர் சார்பாக இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

meena

நடிகை குஷ்புவும் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு பயங்கரமான செய்தியுடன் எழுந்திருக்கிறேன். நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து இதயம் நொறுங்கிவிட்டது.அவர் நுரையீரல் பிரச்னை காரணமாக நீண்டநாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். வாழ்க்கை மிக குரூரமானது. மீனா மற்றும் அவரது மகளை நினைத்து என் மனம் வலிக்கிறது. இதற்கு மேல் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

meena

அவரது மற்றொரு பதிவில், ''சற்று பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என ஊடகத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவர் 3 மாதங்களுக்கு முன்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். கரோனா அவரது நுரையீரலை வெகுவாக பாதித்தது. தயவுசெய்து அவர் கரோனாவால் இறந்ததாக தவறான தகவலை பரப்பி, மக்களை அச்சமுறுத்தாதீர்கள். நம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்தான் ஆனால் தயவுசெய்து அச்சமுறுத்தாதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it