Theme Check

கோதுமை இனி கிடையாது- ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் !!

கோதுமை இனி கிடையாது- ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் !!

கோதுமை இனி கிடையாது- ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் !!
X

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

wheat
அந்த வகையில் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும், நாடு முழுவதும் உள்ள சுமார் 81 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டம், வரும் அக்டோபர் வரை ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தச் சூழலில் நடப்பாண்டு அதிக வெப்பத்தின் காரணமாக கோதுமை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக கூடுதலாக அரிசி வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கோதுமை கொள்முதல் செய்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

wheatwheat

இது தொடர்பாக மாநில உணவுத் துறைக்கு, மதிய உணவு துறை செயலாளர் சுதன்சு பாண்டே எழுதியுள்ள கடிதத்தில், தானியங்களை எவ்வாறு விநியோகிப்பது என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அதிகம் அரிசி சாப்பிடும் மக்கள் இருப்பதால் தமிழ்நாடு, கேரளா, பீகார் போன்ற மாநிலங்களில் பிரச்சனை இல்லை என்றாலும் கூட, கோதுமைக்கு முன்னுரிமை இருப்பதால் உத்தர பிரதேச மாநிலத்தில் சில சிக்கல் இருக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், உள்நாட்டில் கோதுமை பயன்பாடு மற்றும் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் சுதன்சு பாண்டே குறிப்பிட்டு உள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it