அமைதி ஏற்படுமா? - ரஷ்யா- உக்ரைன் பேச்சுவார்த்தை தொடங்கியது

அமைதி ஏற்படுமா? - ரஷ்யா- உக்ரைன் பேச்சுவார்த்தை தொடங்கியது

அமைதி ஏற்படுமா? - ரஷ்யா- உக்ரைன் பேச்சுவார்த்தை தொடங்கியது
X

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் ஒரு பக்கம் இருக்க இரு தரப்பிலும் வார்த்தை மோதலும் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதங்கள் வழங்கினால் மோசமான பின்விளைகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

russia

உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியதுடன், ‘உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் முதலில் ஏற்கவில்லை. பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் விரும்பவில்லை. மீண்டும் ரஷ்யா அழைப்பு விடுத்தபோது, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.
russia
அதன்படி, ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது. அந்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்படும். இதேபோல் ரஷ்யா தரப்பில் உக்ரைனுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it