பாஜக இளைஞரணி நிர்வாகி மர்ம கும்பலால் படுகொலை..!
பாஜக இளைஞரணி நிர்வாகி மர்ம கும்பலால் படுகொலை..!

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (32). பாஜக இளைஞரணி பிரமுகரான இவர் அந்தப் பகுதியில் கோழி கறி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பிரவீன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், பிரவீனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உருட்டுக் கட்டையால் பிரவீனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெல்லாரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்தப் பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பெல்லாரே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, குற்றவாளிகள் நீதிபதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.