குழந்தையைக் கொன்று கணவர் மீது பழி சுமத்திய மனைவி!! கள்ளக்காதலால் விபரீதம்!!

கள்ளக்காதல் படுத்தும்பாடு.. ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்! கணவன் மீது பழிபோட முயற்சி!!

குழந்தையைக் கொன்று கணவர் மீது பழி சுமத்திய மனைவி!! கள்ளக்காதலால் விபரீதம்!!
X

கள்ளக்காதல் கொடூரத்தால் குழந்தையை கொலை செய்து பழியை கணவர் மீது போட முயன்ற இளம்பெண் சிக்கினார். கேரள மாநிலம் கண்ணூர் தையில் பகுதியில் பிரணவ் (29) - ஷரண்யா (22) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஷரண்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரணவிடம் தொலைப்பேசி வாயிலாக பேசிய ஷரண்யா வீட்டிற்கு அழைத்தார். இதையடுத்து அவர் ஷரண்யா வீட்டுக்கு சென்று பின்னர் இரவில் அங்கேயே தங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அருகில் படுத்திருந்த மகன் வியானை காணவில்லை என்று ஷரண்யா கூறினார். இதையடுத்து அனைவரும் குழந்தையை தேடி பார்த்தனர். நீண்ட நேரமாக தேடியும் குழந்தையை காணவில்லை. இது தொடர்பாக கண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

குழந்தையைக் கொன்று கணவர் மீது பழி சுமத்திய மனைவி!! கள்ளக்காதலால் விபரீதம்!!

இதன் ஒரு பகுதியாக போலீசார் கணவன்-மனைவி இடையே விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கடற்கரையில் பாறைகளுக்கு இடையே சிறுவன் வியானின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை கொலை செய்தது பிரணவ் தான் என்றும் மனைவியும், ஷரண்யாதான் கொலை செய்தார் என கணவனும் மாறிமாறி கூறினர். இதையடுத்து ஷரண்யாவின் உடையை போலீசார் வேதியியல் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

குழந்தையைக் கொன்று கணவர் மீது பழி சுமத்திய மனைவி!! கள்ளக்காதலால் விபரீதம்!!

அதில் உடையில் கடல் நீர் பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் தான் கடற்கரைக்கு அழைத்து சென்று குழந்தையை கொலை செய்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து போலீசாரை அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது குழந்தையை கடலில் வீசி கொலை செய்ததை ஷரண்யா ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரது செல்போனை பரிசோதித்து பார்த்தனர். அப்போது ஒரு இளைஞருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.

குழந்தையைக் கொன்று கணவர் மீது பழி சுமத்திய மனைவி!! கள்ளக்காதலால் விபரீதம்!!

இது தொடர்பாக போலீசார் ஷரண்யாவிட் தீவிரமாக விசாரித்தனர். அப்போது பேஸ்-புக் மூலம் ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்ட தெரியவந்தது. இதுதவிர பேஸ்புக் காதலரை திருமணம் செய்ய முடிவு செய்தவர், குழந்தை இடையூறாக இருப்பதை எண்ணி இருக்கிறார். ஆகவே குழந்தையை கொல்ல தீர்மானித்ததாகவும் கூறி உள்ளார். இந்த கொலை பழியை கணவர் மீது போடவே அவரை வீட்டுக்கு அழைத்ததாகவும் ஷரண்யா கூறினார். இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it