கஞ்சா போதையில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட இளைஞர்!!
கஞ்சா போதையில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட இளைஞர்!!

கஞ்சா பழக்கத்தால் ஏற்பட்ட மனநல பாதிப்பால் இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா புகைப்பது மருத்துவ குணம் பொருந்தியது என்றும் கற்பனை திறனை அதிகரிப்பதாகவும் கூறும்வேளையில், உடலுக்கு தீங்கானது, உளவியல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது.
தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 2 ஆண்டுகள் கஞ்சாவுக்கு அடிமையாகி இருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக கஞ்சா புகைக்கும் பழக்கத்தை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், மீண்டும் கஞ்சாவை புகைத்தபோது, அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஆணுறுப்பில் வலி ஏற்பட்டதை அடுத்து வலியை போக்க வேண்டுமென கத்தரிக்கோலால் ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டார். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு அவருக்கு ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அவரிடம் எந்த தற்கொலை எண்ணமும் தோன்றவில்லை. சிகிச்சைக்கு பின்னர் 2 வாரங்களுக்கு பிறகு சிறுநீர் கழிக்கும் அளவுக்கு அவரது உடல்நிலை முன்னேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in

