ஒரே நாளில் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்!! ஆட்டோ டிரைவர் உட்பட மூவர் கைது!!

மும்பையில் இரண்டு இடங்களில் 3 பேரால் ஒரு இளம் பெண் 2 முறை துடிக்க துடிக்க கற்பழித்த செய்யப்பட்ட மும்பையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் இரவு மும்பையில் இளம் பெண்ணை கதற கதற கற்பழித்த காம வெறிப்பிடித்த 3 மிருகங்களையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்!!  ஆட்டோ டிரைவர் உட்பட மூவர் கைது!!
X

மும்பையில் இரண்டு இடங்களில் 3 பேரால் ஒரு இளம் பெண் 2 முறை துடிக்க துடிக்க கற்பழித்த செய்யப்பட்ட மும்பையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் இரவு மும்பையில் இளம் பெண்ணை கதற கதற கற்பழித்த காம வெறிப்பிடித்த 3 மிருகங்களையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்!!  ஆட்டோ டிரைவர் உட்பட மூவர் கைது!!

ப்ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கடந்த வாரம் உறவினர்களோடு மும்பையில் தனது வீட்டிற்கு கட்கோபர் ரயில் நிலையத்திலிருந்து செல்வதற்காக சென்றுக் கொண்டிருந்தார். ரயில் நிலையத்தில், உறவினர்கள் ரயில் ஏறி விட்டனர். அப்பெண் தாமதமாக ரயில் நிலையத்தை அடைந்ததால், ரயிலை தவற விட்டு விட்டார். இதையடுத்து அடுத்த ரயிலில் அவர் ஏறி சென்றார். ரயிலில் இருந்து இறங்கி ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியேறியதும், அங்கிருந்த ஒரு ஆட்டோ டிரைவரிடம் தன்னை வீட்டில் விடுமாறு அழைத்திருக்கிறார். அந்த ஆட்டோ டிரைவர் அவரை அழைத்துக் கொண்டு கிளம்பினார். ஆனால் அந்த இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், நவி மும்பை அருகில் உள்ள மஹாபே பகுதிக்கு கூட்டிச் சென்ற ஆட்டோ டிரைவர் அப்பெண்ணை பலவந்தமாக கற்பழித்து, அணிந்திருந்த நகைகள், செல்போன் முதலியவைகளை பறித்துக் கொண்டு தாக்கி விட்டுச் சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவில் கையில் பணமும், செல்போனும் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அந்த பெண், அந்த வழியாக பைக்கில் வந்த இரு இளைஞர்களை நிறுத்தி உதவி கேட்டுள்ளார்.

ஒரே நாளில் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்!!  ஆட்டோ டிரைவர் உட்பட மூவர் கைது!!

அந்த இருவரும் பைக்கில் ஏற்றிக் கொண்டு கன்சோலி என்ற இடத்துக்கு கூட்டிச் சென்று அவர்களும் மாறி மாறி அந்தப் பெண்ணைக் கற்பழித்துள்ளனர். இந்த அக்கிரம சம்பவம் குறித்து போலீசாஅர் புகார் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தற்போது பலாத்காரம் செய்த 3 பேரும் சிக்கி விட்டனர்.

newstm.in

Tags:
Next Story
Share it