அதிரடி! பள்ளிகளை கண்டிப்பாக இடிக்க வேண்டும்!!
அதிரடி! பள்ளிகளை கண்டிப்பாக இடிக்க வேண்டும்!!

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 281 பள்ளிகளில் 32 பள்ளிகளின் கட்டிடத்தை கண்டிப்பாக இடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலும் குழு அமைத்து ஆய்வு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த 281 பள்ளிகளின் சுற்று சுவர், கழிப்பறை, வகுப்பறைகள் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் கடந்த திங்கள் கிழமை முதல் ஆய்வு செய்தனர்.
அந்த குழுக்கள் அளித்துள்ள அறிக்கையின்படி,32 பள்ளிகளின் கட்டிடத்தை கண்டிப்பாக இடிக்க வேண்டும் என்றும், மேலும் 40 பள்ளிகளின் பட்டியலை கட்டிடங்கள் துறையிடம் கொடுத்து அந்த கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளும்படி பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து கட்டிட துறை அதிகாரிகள் 72 பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து 72 பள்ளிகளின் கட்டிடங்கள் இடிக்கப்படுமா அல்லது 32 பள்ளிகளின் கட்டிடம் இடிக்க வேண்டுமா என்று இரண்டு நாட்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
newstm.in

