Theme Check

12- 15 வயதினருக்கு தடுப்பூசி போட அனுமதி !

12- 15 வயதினருக்கு தடுப்பூசி போட அனுமதி !

12- 15 வயதினருக்கு தடுப்பூசி போட அனுமதி !
X

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இப்போது உலக நாடுகளை ஆட்டிபடைத்து வருகிறது. உலக நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழப்பில் முதலில் உள்ள நாடு அமெரிக்கா. எனினும் தற்போது அங்கு இந்தியாவை விட ஒருநாள் பாதிப்பு குறைந்து வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.96 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தங்களது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது என தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it