நடிகர் சுதீப் பிறந்த நாளில் மாட்டை பலி கொடுத்து ரத்தத்தை கட்-அவுட்டில் தெளித்த ரசிகர்களால் பரபரப்பு !

நடிகர் சுதீப் பிறந்த நாளில் மாட்டை பலி கொடுத்து ரத்தத்தை கட்-அவுட்டில் தெளித்த ரசிகர்களால் பரபரப்பு !

நடிகர் சுதீப் பிறந்த நாளில் மாட்டை பலி கொடுத்து ரத்தத்தை கட்-அவுட்டில் தெளித்த ரசிகர்களால் பரபரப்பு !
X

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து தேசிய அளவில் பிரசித்தி பெற்ற நடிகராக வலம் வருகிறார். பாகுபலி புலி உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

இவர் தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நடிப்போடு நிறுத்தி விடாமல், இதுபோன்ற சமூக சேவைகளின் ஈடுபடுவது மூலம் ரசிகர்கள் மனதில் அளவுக்கு அதிகமான அன்பை பெற்றுள்ளார் நடிகர் சுதீப்.

sudeep

இந்த நிலையில் நடிகர் சுதீப் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினர். அந்த வகையில், பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி கட்அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதை பலியிட்டு அந்த ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எருமை மாடு ஒன்றை நிறுத்தி சுதீப், வாழ்க என்ற குரல் எழுப்பியவாறு மாட்டின் தலையை அரிவாளால் துண்டித்தனர்.

sudeep

பின்னர் ரத்தத்தை எடுத்து சுதீப் கட்-அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, கன்னட சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it