எப்போதும் கருணையுடன் நடந்துகொள்ளும் எல்.ஐ.சி - நெகிழ்ச்சி சம்பவம்

டெல்லியில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். அவரது மறைவு நாட்டுக்கு இழப்புதான். அதே வேளையில் அவரது குடும்பத்திற்கு பேரிழப்பு. செய்வதறியாது திகைத்து நின்றது காவலரின் குடும்பம். இறந்து போன தலைமை காவலர் ரத்தன் லால் தன் பெயரில் எல்.ஐ.சி பாலிசி எடுத்திருந்தார்.

எப்போதும் கருணையுடன் நடந்துகொள்ளும் எல்.ஐ.சி - நெகிழ்ச்சி சம்பவம்
X

டெல்லியில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். அவரது மறைவு நாட்டுக்கு இழப்புதான். அதே வேளையில் அவரது குடும்பத்திற்கு பேரிழப்பு. செய்வதறியாது திகைத்து நின்றது காவலரின் குடும்பம். இறந்து போன தலைமை காவலர் ரத்தன் லால் தன் பெயரில் எல்.ஐ.சி பாலிசி எடுத்திருந்தார்.

எப்போதும் கருணையுடன் நடந்துகொள்ளும் எல்.ஐ.சி - நெகிழ்ச்சி சம்பவம்
சாதாரணமாக இழப்பீட்டுத் தொகை வந்து சேர மாதக்கணக்கு அல்ல வருடக்கணக்கில் ஆகும். அதுவும் கலவரத்தில் இறந்துபோனால் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இழப்பீடு தரமாட்டார்கள். இங்கு தான் எல்.ஐ.சி தனித்து நிற்கிறது.


காவலர் ரத்தன் லால் எடுத்திருந்த எல்ஐசி பாலிசிக்கான இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 607 ரூபாய்க்கான காசோலையை எல்.ஐ.சி அதிகாரிகள் காவலரின் மனைவி பூனம் ரத்தன் லாலா பெயரில் நேரடியாக அவர் வீட்டில் போய் வழங்கினர்.

எப்போதும் கருணையுடன் நடந்துகொள்ளும் எல்.ஐ.சி - நெகிழ்ச்சி சம்பவம்
இதுபோன்ற துயரங்களின் போது எல்.ஐ.சி அதிகாரிகள் பாலிசி பாண்டு கேட்கமாட்டார்கள், வாரிசுதாரர் விவரங்கள் கேட்கமாட்டார்கள். எந்த ஒரு பார்மாலிட்டியும் இல்லாமல் முதலில் அந்த குடும்பத்திற்கு இழப்பீட்டை கொடுத்துவிட்டு துயரமெல்லாம் குறைந்த பிறகு தான், ஆவணங்களை பெற்றுக்கொள்வார்கள். எதிர்பாராமல் நடக்கும் ஒவ்வொரு துயரங்களிலும் எல்.ஐ.சி இப்படி கருணையோடு தான் நடந்து கொள்கிறது.


சமீபத்தில் அவிநாசி பஸ் விபத்தில் இறந்துபோன 6 பேரின் பாலிசி தொகை 53 லட்ச ரூபாயை இரண்டாவது நாளிலேயே அவர்கள் வீட்டில் போய் எல்.ஐ.சி மேலாளர் கொடுத்துவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it