Theme Check

மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! குழந்தைக்காக உயிரை பணயம் வைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

குழந்தை உயிரை காப்பாற்ற ஊதியம் வேண்டாம்.. மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்.. மனித நேய ஓட்டுநருக்கு பாராட்டு..!

மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! குழந்தைக்காக உயிரை பணயம் வைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!
X

பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக 400 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மங்களூர் நகரை சேர்ந்த மணி என்பவரின் மனைவிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த குழந்தையை அனுமதித்தனர். தற்போது குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலும், இதயத்தில் சிறிய பிரச்சனை இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! குழந்தைக்காக உயிரை பணயம் வைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

மேலும், உடனடியாக அந்த குழந்தையை பெங்களூர் கொண்டு சென்று இதற்கான சிகிச்சையை அளிக்கவும் கூறியிருக்கிறார்கள். இதற்காக தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகமது ஹனீஃப் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்கள். அவரிடம் இந்த விஷயத்தை கூறவும், அவர் தான் குழந்தையை கொண்டு செல்வதாக கூறியிருக்கிறார்.

மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! குழந்தைக்காக உயிரை பணயம் வைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

இதற்காக போக்குவரத்தினை காவலர்கள் சீர் செய்ய அந்த ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் பறந்தது. இதனால் கிட்டதட்ட 400 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 20 நிமிடங்களில் அவர் சென்றடைந்துள்ளார். அவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இதற்காக அவர் ஊதியம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it