Theme Check

பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு ரகசிய தகவல் அளித்த ராணுவ வீரர் கைது !!

பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு ரகசிய தகவல் அளித்த ராணுவ வீரர் கைது !!

பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு ரகசிய தகவல் அளித்த ராணுவ வீரர் கைது !!
X

ராணுவ தகவல்களை பாகிஸ்தான் பெண்ணுக்கு தெரிவித்த ராணுவர் வீரர் கைது செய்யப்பட்டார்.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். ராணுவ வீரரான இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை இவர் பகிர்ந்தது அம்பலமாகியுள்ளது.

இவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

dgs

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்ற பெயரில் அந்த பாகிஸ்தான் பெண் உளவாளி இவரிடம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிடமிருந்து பிரதீப் குமாருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது.

டெல்லியில் சந்தித்துப் பேசலாம் என்று காதலுடன் பேசியும், திருமணம் செய்துகொள்ள விருப்பமாக இருப்பதாகக் கூறியும் முக்கியத் தகவல்களை அந்த பெண் பிரதீப் குமாரிடமிருந்து பெற்றுள்ளார். பிரதீப் குமார் மீது அரசு ரகசியச் சட்டம், 1923-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it