Theme Check

பலாத்கார முயற்சி.. அடித்தே கொலை செய்த தம்பி !

பலாத்கார முயற்சி.. அடித்தே கொலை செய்த தம்பி !

பலாத்கார முயற்சி.. அடித்தே கொலை செய்த தம்பி !
X

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். நேற்று மாலை கிராமத்திற்கு நடந்துச் சென்றுக்கொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் அந்த இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து இளம்பெண்ணை காப்பாற்றினர். அப்போது ராஜேஷ் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், இளம்பெண்ணை மீட்ட பொதுமக்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இந்தநிலையில், நேற்று இரவு ராஜேஷ் இளம்பெண்ண தேடி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை கண்டதும் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் தம்பி சென்னன் என்பவர் ராஜேஷை இரும்பு ராடால் அடித்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் மருத்துவமனை வளாகத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர்.

G
இதனையடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தருமபுரி நகர காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு சென்னனை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இளம்பெண் பாலியல் தொல்லை சம்பவத்திற்கு ராஜேஷுக்கு உடந்தையாக இருந்ததாக இருவரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newstm.in

Next Story
Share it