Theme Check

அதிகாரிகள் சோதனை.. அச்சத்தில் செல்போனை விழுங்கிய கைதி..!

அதிகாரிகள் சோதனை.. அச்சத்தில் செல்போனை விழுங்கிய கைதி..!

அதிகாரிகள் சோதனை.. அச்சத்தில் செல்போனை விழுங்கிய கைதி..!
X

டில்லியில் உள்ள திகார் சிறையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளிடம் செல்போன்கள் உள்ளிட்ட சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா? என சோதனை செய்யப்படுவது வழக்கம்.

இதன்படி, சிறைத் துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், சிறையின் எண் 1ல் இருந்த கைதியிடம் சிறிய ரக செல்போன் ஒன்று இருந்துள்ளது.
Tihar Prisoner Swallows Mobile Phone Fearing Search - Wings Daily News
அவர், அதிகாரிகள் சோதனை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அதனை விழுங்கி விட்டார். இதை சிறை அதிகாரிகள் மற்றும் பிற கைதிகள் முன்னிலையிலேயே செய்துள்ளார்.

அதன்பின்பு அவரது நிலைமை மோசமடைய, சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் கூடுதல் சிகிச்சைக்காக தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுபற்றி திகார் மத்திய சிறையின் இயக்குநர் சந்தீப் கோயல் கூறும்போது, “செல்போனை விழுங்கிய கைதியின் நிலைமை முன்னேறியுள்ளது. செல்போன் கைதியின் வயிற்றிலேயே உள்ளது.

அதுவாக வெளியே வருவதற்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். அப்படி வரவில்லை எனில், அறுவைச் சிகிச்சை தேவைப்படும்” என்று கூறியுள்ளார்.

Next Story
Share it