மோடியை எதிர்த்து பாஜகவினர் போராடணும்.. சொல்கிறார் பி.ஆர்.பாண்டியன்..!

மோடியை எதிர்த்து பாஜகவினர் போராடணும்.. சொல்கிறார் பி.ஆர்.பாண்டியன்..!

மோடியை எதிர்த்து பாஜகவினர் போராடணும்.. சொல்கிறார் பி.ஆர்.பாண்டியன்..!
X

“கர்நாடகா அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் அலுவலகம் அனுமதியளித்தது தான் மேகதாது அணை பிரச்னைக்கு காரணம்” என்று, பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனாவிடம் மனு அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: “தமிழகத்தில் சமீப காலமாக பாசன விதிமுறைகள் மீறப்படுகின்றன. இதனால், நீர்ப்பாசன முறைகளில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். எனவே, வனத்துறையைப் போன்று நீர்ப்பாசனத் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்.

தஞ்சையில், கர்நாடக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த பிரச்னைக்கு காரணமே பிரதமர் அலுவலகம் 2018ம் ஆண்டு கர்நாடகா அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதியளித்ததுதான். அதைக் கொண்டுதான் புதிய அணை கட்ட ரூ.9000 கோடியில் திட்டமிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது.

எனவே, பிரதமரை கண்டித்து தான் தமிழக பாஜக தலைவர் போராட்டம் நடத்த வேண்டும். மேகேதாது திட்டத்திற்கு பிரதமர் அனுமதி தரமாட்டார் என்று கூறுகிறார். அன்று அனுமதி கொடுத்ததால் தான், கர்நாடகா சட்டப்பேரவையில் நிதி ஒதுக்குகிறார்கள். எனவே, இதுகுறித்து பாஜக விளக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it