#BREAKING உலக மக்கள் அனைவரும் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி
#BREAKING உலக மக்கள் அனைவரும் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன் என சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) 7-வது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை. கொரோனா காலத்தில் யோகா முக்கியத்துவம் பெறுகிறது என கூறினார்.
மேலும் உலக மக்கள் அனைவரும் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
newstm.in

