Theme Check

#BREAKING: டி.என்.பி.சி.யில். 20% ஒதுக்கீடு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

#BREAKING: டி.என்.பி.சி.யில். 20% ஒதுக்கீடு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

#BREAKING: டி.என்.பி.சி.யில். 20% ஒதுக்கீடு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
X

தமிழகத்த்தில், தேர்தல் திருவிழா வரவிருக்கும் அக்னி வெய்யிலுக்கு முன்னோட்டமாக அனல் பறக்கும் அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்களினால் சூடு பிடித்துள்ளது. இரு திராவிட கட்சிகளும், போக்குவரத்தில் பெண்களுக்கு சலுகைகள், மாதந்தோறும் ஊக்கத்தொகை என்று வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்கு சேகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் தமிழ் மொழி வழியாக மட்டுமே பயின்று வரும் மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்பு, கல்வி அல்லது கோரப்பட்டுள்ள தகுதி போன்ற முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டுமே TNPSC-யில் தமிழ் வழியில் பயின்றதற்கான 20% இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள்’ என்றனர்.

இப்படி 12ம் வகுப்பு வரையில் தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு, 12ம் வகுப்பு இறுதியில் சான்றிதழ்களை வழங்கும் போது அதைக் குறிப்பிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் வழியில் தங்களது பள்ளி இறுதியை முடிக்கும் மாணவர்கள் இனி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அதிகளவில் பயன்பெறுவார்கள். தமிழக கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் இதன் மூலம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:
Next Story
Share it