Theme Check

மாணவர்களுக்கு தமிழக அரசின் செம ஹேப்பி நியூஸ்!!

மாணவர்களுக்கு தமிழக அரசின் செம ஹேப்பி நியூஸ்!!

மாணவர்களுக்கு தமிழக அரசின் செம ஹேப்பி நியூஸ்!!
X

பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள், இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், திமுக தலைவர் மு..ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, தமிழ் மொழிக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழில் இனிசியல் எழுத வேண்டும் என்ற உத்தரவும் பிறக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள், இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னெழுத்து, அதாவது, இனிசியல் எழுதும் போது, அதனை தமிழில் எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

tn sec

முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள், அனைத்து அலுவலர் பணியாளர்கள், தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் எனவும், அதில் இனிசியல்- தமிழில் எழுதப்பட வேண்டும். ஏற்கனவே, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் கையொப்பம் முன்னிறுத்தும் இருக்கும் என சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த நடைமுறைகளை தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் அத்துறை சார்ந்த அலுவலகங்களிலும் தவறாது நடைமுறைப்படுத்தி ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it