நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!!
நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47ஆவது கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. அதில் பல பொருட்கள் மீதான வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும் என நிதியமைச்சர் அறிவித்தார். முன்னதாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டுனெ அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெறும் என்று அறிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
எங்கள் அழைப்பை ஏற்று மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த ஒப்புக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி.
I thank Hon'ble Union Finance Minister @nsitharaman for accepting our invitation and agreeing to have the next #GSTCouncilMeet at Madurai. On behalf of the Temple City and its people, we warmly welcome the Hon'ble Union Ministers, Hon'ble State Ministers and senior officials!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு வருகை தரும் மாநில அமைச்சர்கள் மற்றும மூத்த அதகாரிகளை கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

