வைரல் மாணவிகளை சந்தித்து நம்பிக்கை அளித்த முதலமைச்சர்! வீடியோ!!
வைரல் மாணவிகளை சந்தித்து நம்பிக்கை அளித்த முதலமைச்சர்! வீடியோ!!

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ வைரலான நிலையில், அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவடி - இமாகுலேட் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஆர்.பிரியா, அம்பத்தூர் - எபினேசர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் கே.திவ்யா, ஆவடி- நசரத் அகாடமியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாணவிகளை தலைமைச் செயலகத்தில் அழைத்துப் பேசினார். அப்போது, அம்மாணவிகள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்திட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தாங்கள் வசிக்கும் ஆவடி நரிக்குறவர் காலனியை மேம்படுத்திடவும், தங்கள் கல்விக்கு தேவையான உதவிகளை செய்திடவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும், பள்ளி மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது!
— M.K.Stalin (@mkstalin) March 16, 2022
திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல!
நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து #DravidianModel-ல் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்! pic.twitter.com/4p0THTEUFV
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனிருந்தார்.
newstm.in

