இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள் !!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள் !!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள் !!
X

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ் குமார் . இவர் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் இசையிலும் கவனம் செலுத்தி வருகிறார். தன் தனித்தன்மை வாய்ந்த இசையால் ரசிகர்களை கவர்ந்தவர்.சமீபத்தில் இவர் இசையில் வெளியான "அசுரன்" மற்றும் "சூரரை போற்று" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இவர் தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43வது படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்தார் ஜிவிபிரகாஷ். ‘இந்த நபர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள், அவரை பாடல் பதிவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். அவர் மிகவும் திறமைசாலியாக இருக்கிறார். குறிப்புகள் மிக துல்லியமாக இருக்கின்றன’என பதிவிட்டிருந்தார்.


ஜிவிபிரகாஷுக்கு பதில் ட்வீட் போட்ட நெட்டிசன் ஒருவர், நாதஸ்வரம் வாசிப்பவரின் பெயர் நாராயணன் எனத் தெரிவித்து அவரது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார். பெங்களூரு தெருக்களில் பூம் பூம் மாட்டுடன், நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞருக்கு விரைவில் தன் இசையில் வாசிக்க வாய்ப்பளிப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2019ல் கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற இளைஞரை அழைத்து தனது இசையில் வெளிவந்த ‘சீறு’ படத்தில் இசையமைப்பாளர் டி இமான் ‘செவ்வந்தியே…’ என்ற பாடலைப் பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:
Next Story
Share it