Theme Check

கொரோனா 3ஆவது அலை.. இந்த 46 மாவட்டங்களில் பரவல் அதிகரிப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை !!

கொரோனா 3ஆவது அலை.. இந்த 46 மாவட்டங்களில் பரவல் அதிகரிப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை !!

கொரோனா 3ஆவது அலை.. இந்த 46 மாவட்டங்களில் பரவல் அதிகரிப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை !!
X

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக குறைந்துவந்த கொரோனா பாதிப்பு இன்று நாடு முழுவதும் மீண்டும் 41 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்துவது தவிர தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45-60 வயது பிரிவினருக்கு தடுப்பூசி முன்னுரிமை அளித்து போடப்பட வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவால் உயிரிழக்கும் 80 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டோர் என அரசு குறிப்பிட்டிருந்தது. மூன்றாவது அலை குறித்த அச்சம் எழுந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

vaccine

இதிலும் குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஒடிசா, மிசோரம், மேகலாயா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் அதிகரிப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

vaccine

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களை குறிப்பிட்டு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it