கொரோனா பாதிப்பு!! அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்க!!
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12 இந்தியர்களுக்கும், 16 இத்தாலி பயணிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா அறிகுறி, பாதிப்பு குறித்து தெரிவிக்க மத்திய அரசு அவசர உதவி எண் ஒன்றை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறி குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மத்திய அரசு அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12 இந்தியர்களுக்கும், 16 இத்தாலி பயணிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா அறிகுறி, பாதிப்பு குறித்து தெரிவிக்க மத்திய அரசு அவசர உதவி எண் ஒன்றை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் +91-11-23978046 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கும் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரல் தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
newstm.in