இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு.. அதிர்ச்சியில் மருத்துவர்கள் !!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு.. அதிர்ச்சியில் மருத்துவர்கள் !!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்து வருகிறது மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 213 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று இது மேலும் உயர்ந்து 12 ஆயிரத்து 847 ஆக பதிவானது.
இந்நிலையில் இன்று மேலும் அதிகரித்து புதிதாக 13,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 216 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32, 83,793 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,840 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,90,845 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 68,108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,96,00,42,768 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,99,824 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,84,924 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 85,73,95,276 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
newstm.in

