Theme Check

மீண்டும் வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்? - முதலமைச்சர் முக்கிய ஆலோசனை !!

மீண்டும் வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்? - முதலமைச்சர் முக்கிய ஆலோசனை !!

மீண்டும் வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்? - முதலமைச்சர் முக்கிய ஆலோசனை !!
X

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 2000-ஐ தாண்டிவிட்டது. குறிப்பாக, தலைநகர் சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து, பொது மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 50 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
Coronaஇந்தக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, நோய் பரவல் அதிகம் உள்ள சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
V
மேலும், தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Newstm.in
Next Story
Share it