கொரோனா நோயாளி மாயம் - பீதியில் பொதுமக்கள்!

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் 44 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கொரோனா நோயாளி மாயம் - பீதியில் பொதுமக்கள்!
X

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் 44 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் கொரோனா அறிகுறியுடன் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மாயமாகியுள்ளார். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று தப்பிச் சென்றுள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா நோயாளி மாயம் - பீதியில் பொதுமக்கள்!
கொரோனா அறிகுறி இருப்பதை மருத்துவர்களிடம் சொன்னால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவோம் என்று சிலர் எண்ணுகின்றனர். வேலை கெட்டும்போது என்று நினைக்கின்றனர். ஆனால் நோய் தீவிரமடைந்தால் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம். மேலும் நம்மை சுற்றி இருப்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வெளிப்படையாக கூறி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.

newstm.in

Tags:
Next Story
Share it