விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு – உடனடியாக விண்ணப்பிக்கலாம்!!
விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு – உடனடியாக விண்ணப்பிக்கலாம்!!

கிசான் கிரெடிட் கார்டு எனப்படும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் அட்டையில் விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அனைத்து விவசாயிகளும் இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் வாங்கிப் பயன்பெறமுடியும்.
ரூ.3 லட்சம் வரை கடன் தொகைக்கு 2 சதவீத வட்டிச் சலுகை கிடைக்கிறது. உடனடியாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 3 சதவீத கூடுதல் வட்டிச் சலுகை கிடைக்கிறது.
இதுபோன்ற நிறைய அம்சங்கள் இதில் உள்ளன. இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டம் பிஎம் கிசான் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் இந்த கிசான் கிரெடிட் கார்டை எளிதாகப் பெறலாம். எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
மொபைல் போனில் SBI YONO ஆப் டவுன்லோடு செய்து லாகின் செய்ய வேண்டும்.
உள்ளே சென்றதும் Yono Krishi என்ற வசதியில் சென்று khata என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக KCC review பிரிவில் சென்று அப்ளை கொடுக்க வேண்டும்.
வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

வங்கியில் விண்ணப்பம் வாங்கி அதனுடன் நில ஆவணங்கள் மற்றும் பயிர் விவரங்களைச் சமர்ப்பித்து சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணம் மூலம் இந்த கடன் அட்டையை பெற முடியும்.
newstm.in

