Theme Check

மாமியாரின் கள்ளக்காதலரை மயக்கிய மருமகள்! சீரழிந்த குடும்பம்!

மாமியாரின் கள்ளக்காதலரை மயக்கிய மருமகள்: நிலைகுலைந்த குடும்பம்

மாமியாரின் கள்ளக்காதலரை மயக்கிய மருமகள்! சீரழிந்த குடும்பம்!
X

கள்ளக்காதலால் ஒரு குடும்பமே சிக்கி சீரழிந்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமியாரின் கள்ளக்காதலனை மருமகள் மயக்கி, கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, ஓடிப் போய் விட்டதால் அந்த குடும்பமே தற்போது நிலை குலைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் 26 வயது இளைஞருக்கும் 23 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர். கணவன், மனைவிக்குள் சந்தோஷமாக போய் கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில், வீட்டிலிருந்த அந்த பெண்ணின் மாமியார் ரூபத்தில் புயலாக புரட்டி போட்டது.

தனது மாமியாரை பார்ப்பதற்காக, தினந்தோறும் ஒரு வாலிபர் வீட்டிற்கு வருவதைப் பார்த்த அந்தப் பெண், இது குறித்து தனது கணவரிடம், மாமியாரைப் பார்ப்பதற்காக அடிக்கடி ஒரு பணக்கார வாலிபர் வீட்டிற்கு வருவதாகவும், அதன் பிறகு இருவரும் படுக்கையறைக்குச் சென்று கதவை சாத்திக் கொள்வதாகவும், அந்த வாலிபர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் கணவரிடம் புதுப்பெண் கூறியுள்ளார். ஆனால் அவரது கணவர் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் அந்த பணக்கார வாலிபருக்கு மருமகளின் மீது கண் விழுந்துள்ளது. நாளடைவில் மருமகளுக்கும், வாலிபருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. ஒருகட்டத்தில் மாமியாரின் கள்ளக்காதலருடன் மருமகள் மாயமாகி விட்டார். இதனால் தற்போது அந்த குடும்பமே நிலைகுலைந்து உள்ளது. தனது மனைவி வீட்டை விட்டு ஓடிச் சென்றதற்கு அம்மா தான் காரணம் என்று மகனும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it