Theme Check

முதல்வர் குறித்து அவதூறு.. சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!

முதல்வர் குறித்து அவதூறு.. சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!

முதல்வர் குறித்து அவதூறு.. சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!
X

சென்னை, பூக்கடை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சேகர். சமீபத்தில் இவர், ஃபேஸ்புக் வலைதளத்தில் தன் நண்பரின் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார்.

அதில், “தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில ஒருத்தன் 5,௦௦௦ ரூபாய் கொடுக்கச் சொன்னான். வந்தா அதை காணோம். அதைக் கேளுங்கடா என்றால், புரியாத ஹிந்தி மொழியில பேசியதை.. ஏதோ புரிஞ்ச மாதிரி... சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை” என பதிவு செய்திருந்தார்.
TN cop Suspended For attacking the Govt in Social Media | முதலமைச்சரை  ஒருமையில் பதிவிட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் | Tamil Nadu News in  Tamil
தமிழக காவல் துறைக்கும், காவலர்களுக்கும் நன்மை செய்து வரும் அரசு குறித்து காவலர் ஒருவர் இப்படி பதிவு செய்வது நியாயமா என ஒருவர் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இப்படி, அடுத்தடுத்து கேள்வி பரிமாற்றம் நடந்துள்ளது. இதையறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதில், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தது உறுதியானது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் ஒருவரே தமிழக அரசையும், முதல்வரையும், சமூக வலைதளத்தில் மறைமுகமாக சாடியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story
Share it