Theme Check

2ஆண்டுகளுக்கு முன் பதவியேற்ற அதே நாளில் ராஜினாமா செய்த எடியூரப்பா..! என்ன காரணம்?

2ஆண்டுகளுக்கு முன் பதவியேற்ற அதே நாளில் ராஜினாமா செய்த எடியூரப்பா..! என்ன காரணம்?

2ஆண்டுகளுக்கு முன் பதவியேற்ற அதே நாளில் ராஜினாமா செய்த எடியூரப்பா..! என்ன காரணம்?
X

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா 4-வது முறையாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் அதிலிருந்து அப்போது 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து முதல்வர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியது.

மேலும், 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அப்போதே நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ராஜினாமா செய்யுமாறு எனக்கு யாரும் நெருக்கடி தரவில்லை. ஏற்கனவே உறுதி அளித்த படி 2 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்து விட்டு ராஜினாமா செய்துள்ளேன்.

என் மீது மதிப்பு வைத்து கர்நாடகா முதல்வராக மக்களுக்கு சேவை செய்ய 2 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்த பிரதமர் மோடி, நட்டா மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபடுவேன். எனக்கு பிறகு முதல்வராக பதவியேற்பவர் யார் என்ற விவரம் எனக்கு கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it