பரபரப்பு! தொடரும் மாடல் அழகிகள் தற்கொலை!!
பரபரப்பு! தொடரும் மாடல் அழகிகள் தற்கொலை!!

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு 'மாடல்' அழகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெடியடங்கா என்ற இடத்தில் வசித்து வந்த அழகுக் கலை நிபுணரான சரஸ்வதி தாஸ் (18) விளம்பர படங்களுக்கு மாடலிங்கும் செய்து வந்தார். இவர், தன் வீட்டில் திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொல்கத்தாவில் கடந்த இரண்டு வாரங்களில் தற்கொலை செய்து கொண்ட நான்காவது மாடல் இவர். ஏற்கனவே மஞ்சுஷா நியோகி, பிதிஷா மஜும்தர், பல்லவி ஆகிய மாடல்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது மாடலிங் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. சரஸ்வதி தாஸ் மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் கடந்த இரண்டு வாரங்களில் நான்கு மாடல்கள் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
newstm.in

