#BREAKING:- ஏழுமலையான் கோவில் சிறப்பு அதிகாரி டாலர் சேஷாத்ரி காலமானார்..!

#BREAKING:- ஏழுமலையான் கோவில் சிறப்பு அதிகாரி டாலர் சேஷாத்ரி காலமானார்..!

#BREAKING:- ஏழுமலையான் கோவில் சிறப்பு அதிகாரி டாலர் சேஷாத்ரி காலமானார்..!
X

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய டாலர் சேஷாத்ரி என்கிற சேஷாத்திரி மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார்.

టీటీడీ నుండి డాలర్ శేషాద్రి ఔట్..! మరో వంద మందికీ ఉద్వాసన: తితిదే కీలక  నిర్ణయం..! | TTD decided to terminate retired employees services from the  temple - Telugu Oneindia
திருப்பதியைச் சேர்ந்தவர் டாலர் சேஷாத்ரி எனப்படும் சேஷாத்திரி. கடந்த 1977ம் ஆண்டு திருப்பதி கோவிலில் ஊழியராக பணியில் சேர்ந்த டாலர் சேஷாத்ரி ஏழுமலையானின் திருவாபரணங்களை நிர்வகிக்கும் பொக்கிஷதாரர் (ஆபரண காப்பாளர்) பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக அந்தப் பணியைத் திறம்படச் செய்து வந்தவர் டாலர் சேஷாத்ரி. தனது பணிக்காலம் முடிந்ததால் கடந்த 2007ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பல்வேறு காரணங்களால் அவருடைய சேவை ஏழுமலையான் கோவிலுக்கு தேவைப்பட்டது. எனவே, சிறப்பு பணிகளுக்கான அதிகாரி (ஆபீசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டீஸ்) என்ற பணியை ஏற்படுத்தி, 2007ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் ஏழுமலையான் கோவிலில் பணியாற்றி வந்தார்.

வாரிசுகள் யாரும் இல்லாத சேஷாத்திரி, “என்னுடைய இறுதி நாள் வரை நான் இறை சேவையில் இருக்க வேண்டும். அதை மட்டுமே நான் ஏழுமலையானை வேண்டிக்கொள்கிறேன்” என்று அடிக்கடி கூறுவார். அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப 2007ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றிருந்தாலும் அவருக்கு இறுதிவரை ஏழுமலையான் கோவிலில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

Dollar Seshadri, Tirumala Temple's Super Priest, Dies at 74 Due to Cardiac  Arrest | 📰 LatestLY
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விசாகப்பட்டினத்தில் இன்று நடத்தும் கார்த்திகை தீப உற்சவ நிகழ்ச்சியை நிர்வகிப்பதற்காக அங்கு சென்றிருந்தபோது இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதற்கு முன்னர், மூன்று முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நான்காவது மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.

Tags:
Next Story
Share it