இவர்களுக்கு குடும்ப பென்சன் வழங்கக்கூடாது.. உயர் நீதிமன்றம் உத்தரவு! !!
இவர்களுக்கு குடும்ப பென்சன் வழங்கக்கூடாது.. உயர் நீதிமன்றம் உத்தரவு! !!

குடும்பப் பென்சன் விவகாரத்தில் அனுதாபத்தின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்பட முடியாது எனவும், விதிமுறைகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க முடியும் எனவும் கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மின் பரிமாற்றக் கழகத்தில் (KPTCL) 1974ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஜனர்த்தனா என்பவர் பணியாளராக இணைந்துள்ளார். பின்னர் 1978ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பணிக்காலத்திலேயே வாகன விபத்தில் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து ஜனர்த்தனாவின் மனைவில் சாரதா தனக்கு புதிய விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப பென்சன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே ஜனர்த்தனா இறந்துவிட்டதால் அவரது மனைவி சாரதாவுக்கு குடும்ப பென்சன் வழங்க முடியாது என நீதிமன்றத்தில் கர்நாடக மின் பரிமாற்ற கழகம் வாதிட்டது. இதையடுத்து, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவ்வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாரதாவுக்கு குடும்ப பென்சனும், வட்டியுடன் சேர்த்து பென்சன் நிலுவைத் தொகையும் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்திலேயே கர்நாடக மின் பரிமாற்றக் கழகம் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு நீதிபதி கிருஷ்ணா திக்சித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுபோன்ற விவகாரங்களில் விதிமுறை அடிப்படையில் செயல்பட முடியுமே தவிர அனுதாபத்தின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது, கர்நாடக மின் பரிமாற்ற கழகத்தின் வாதத்தை ஏற்று ஒற்றை நீதிபதி அமர்வின் தீர்ப்பை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதாவது, சாரதாவுக்கு புதிய விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப பென்சன் மற்றும் நிலுவைத் தொகை வழங்க முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
newstm.in

