2ஆவது திருமணத்திற்கு தயாராகும் பிரபல சீரியல் நடிகை.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
2ஆவது திருமணத்திற்கு தயாராகும் பிரபல சீரியல் நடிகை.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. கடந்த 2011ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிய இவர் பிரபலமானார். அதோடுமட்டுமல்லாமல், இந்த சீரியலில் தனது ஜோடியாக நடித்த தினேஷ் உடன் நிஜத்திலும் ஜோடி ஆனார்.
தொடர்ந்து இவர் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் மீனாட்சியாக என்ட்ரி ஆனார். தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் கலக்கி வந்தார்.
கடைசியாக நடித்து வந்த “நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2” சீரியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் “இது சொல்ல மறந்த கதை” எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

நடிகை ரசித்தாவிற்கும் பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதி இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக, இருவரும் தற்போது தனித்தனி வீட்டில் வாழ்த்து வருகின்றனர். அண்மையில் ரச்சிதா முதன்முறையாக கணவரை பிரிந்து வாழ்வதை பற்றி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை ரச்சிதா விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. தற்போது அவர் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
newstm.in

