Theme Check

ஓய்வூதிய தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு!?

ஓய்வூதிய தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு!?

ஓய்வூதிய தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு!?
X

ஓய்வூதியம் பெறும் வயது மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

ஊழியர்களுக்கான ஓய்வூதிய உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையில் ஊழியர்களுக்கான பணிபுரியும் வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பென்சன் தொகை உயர்வு மற்றும் ஓய்வு பெறும் வயது குறித்த இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டு விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

money

பணிபுரியும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான திறன் மேம்பாடு குறித்தும் இந்த அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

pensioners

2019ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில், 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 32 கோடி மூத்த குடிமக்கள் இருப்பார்கள் மதிப்பிடப்பட்டது. அதாவது, நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 19.5 சதவீதப் பேர் ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் பிரிவில் இருப்பார்கள்.

எனவே அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஓய்வு பெறும் வயதையும், பென்சன் தொகையையும் உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it