பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு! அனுமார் கொடி ஏற்றம்!! அதிர்ச்சி வீடியோ!! டெல்லியில் பதற்றம்?!
டெல்லி பதற்றம்.. பிரபல மசூதிக்கு தீ வைப்பு.. அனுமார் கொடி ஏற்றம்.. அதிர்ச்சி வீடியோ..

சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. டெல்லியில் மூன்று நாட்களாக நடக்கும் இந்த கலவரம் நடக்கும் கலவரம் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அங்கு பாதுகாப்பிற்காக தற்போது சிஆர்பிஎப் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மசூதி ஒன்று எரிக்கப்பட்ட வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பிரபல பத்திரிக்கையாளர் ராணா அயூப்தான் இந்த வீடியோவை முதலில் வெளியிட்டது. அசோக் நகரில் உள்ள பாதீ மசூதி எரிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டார். அதன்பின் அந்த வீடியோவை அவர் நீக்கினார். பின் அந்த செய்தியை உறுதிப்படுத்திவிட்டு அந்த வீடியோவை மீண்டும் வெளியிட்டார்.
முதலில் அதனை போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டாலும் பின்னர் அது டெல்லி அசோக் நகரில் நடந்தது தான் என உறுதி செய்யப்பட்டது. அந்த மசூதிக்குள் நுழைந்த கும்பல் முதலில் மசூதியை சேதப்படுத்தி தீவைத்து எரித்தது. பின்னர் மசூதியின் மேலே இருக்கும் பச்சை வண்ண இசுலாமிய கொடியை கீழே இறக்கி கிழித்து இருக்கிறார்கள். அதன்பின் அதே இடத்தில காவி நிற அனுமார் கொடியை ஏற்றி உள்ளனர். இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. கலவரம் செய்த நபர் ஒருவர் கொடியை மாற்றுவது வைரலாகி உள்ளது.

அதோடு கடைசியில் வெளியில் செல்லும்போது மசூதியின் மற்ற இடங்களுக்கும் அக்கும்பல் தீவைத்ததாக கூறப்படுகிறது. ஜெய் ஸ்ரீராம் கோஷத்தோடு அவர்கள் மசூதியை எரித்து உள்ளனர். மசூதியின் உட்பக்கம் கொழுந்துவிட்டு எரியும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அங்கு தீயணைப்பு படையினரும் உள்ளே வந்து தீயை அணைத்து உள்ளனர். அதேபோல் போலீஸ் சிலரும் உள்ளே இருந்துள்ளனர். போலீஸ் இதை நேரில் பார்த்தும் கூட, இந்த மசூதி இடிப்பு பொய்யான தகவல் என்று மறுத்துள்ளது.
Re-posting this video after verifying its authenticity. It is from Delhi. Men marching on top of a mosque, vandalising it and placing a saffron flag over it. pic.twitter.com/bScgJMxKc3
— Rana Ayyub (@RanaAyyub) February 25, 2020
பல்வேறு தரப்பினர் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த மசூதி இடிப்பு உண்மைதான். இதை திட்டமிட்டு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்றும் பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். பாபர் மசூதிக்கு பின் டெல்லியில் தற்போது பாதீ மசூதி தாக்கப்பட்டுள்ளது. இது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
newstm.in


