Theme Check

ஓடும் பேருந்தில் பற்றிய நெருப்பு.. 55 பயணிகள் உயிர் தப்பிய பரபரப்பு நொடிகள்- வீடியோ !!

ஓடும் பேருந்தில் பற்றிய நெருப்பு.. 55 பயணிகள் உயிர் தப்பிய பரபரப்பு நொடிகள்- வீடியோ !!

ஓடும் பேருந்தில் பற்றிய நெருப்பு.. 55 பயணிகள் உயிர் தப்பிய பரபரப்பு நொடிகள்- வீடியோ !!
X

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் பெரும் அச்சம் நிலவியது.

bus fire

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கிட்டிகதான் என்ற இடத்தின் அருகே நகரப்பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 55 பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது வழக்கத்துக்கு மாறாக பேருந்தின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

bus fire

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், பேருந்தை நிறுத்தி தான் கீழே இறங்கியதோடு, பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டுள்ளார். பயணிகள் இறங்கிவிட்ட பின் புகை வந்த இடத்தை ஆய்வுசெய்ய நினைத்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது. சாலையில் பேருந்து எரிந்துகொண்டிருந்ததை மக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் அடைந்தனர்.

bus fire

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து நெருப்பை அணைத்தனர். எனினும் பெருந்தின் பெரும் பகுதி தீயில் எரிந்தது. ஓட்டுநரின் துரித நடவடிக்கையால், பேருந்தில் இருந்த 55 பயணிகளும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர்தப்பினர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="811">
newstm.in

Next Story
Share it