முதல் நாள் விருது.. அடுத்தநாள் வழக்குப்பதிவு.. சுந்தர் பிச்சைக்கு வந்த சோதனை !!

முதல் நாள் விருது.. அடுத்தநாள் வழக்குப்பதிவு.. சுந்தர் பிச்சைக்கு வந்த சோதனை !!

முதல் நாள் விருது.. அடுத்தநாள் வழக்குப்பதிவு.. சுந்தர் பிச்சைக்கு வந்த சோதனை !!
X

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன், ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தை இன்னும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ திரைப்படத்தை யூடியூப்பில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூடியூப் நிர்வாகத்திடம் பலமுறை அவர் புகார் தெரிவித்தும் அதை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் புகார் தெரிவித்துள்ளார்.

sundar pitchi

இதனையடுத்து, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் மீது காப்புரிமை விதிமீறல் புகார் அளித்தார். தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, வெளியிடவில்லை. எனினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யூடியூப் நிர்வாகம் விளம்பரங்கள் மற்ற ஆதாரங்கள் வழியே இந்தி திரைப்படத்தின் மூலம் பெரும் வருவாயை ஈட்டியதாக சுனீல் தர்ஷனின் வழக்கறிஞர் ஆதித்யா தெரிவித்துள்ளார்.

sundar pitchi

இந்த நிலையில், காப்புரிமை சட்டத்தை மீறி யூடியூப்பில் திரைப்படம் பதிவேற்றப்பட்டது தொடர்பாக சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கூகுள் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் யூடியூப் ஊழியர்கள் ஐந்து பேர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருது அறிவித்து கவுரவித்த மறுநாளே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it