Theme Check

இன்று முதல் கட்டாயம்... தமிழக அரசு திடீர் உத்தரவு!!

இன்று முதல் கட்டாயம்... தமிழக அரசு திடீர் உத்தரவு!!

இன்று முதல் கட்டாயம்... தமிழக அரசு திடீர் உத்தரவு!!
X

கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 771ஆக பதிவான நிலையில், நேற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.

corona

தமிழகத்தில் ஒரேநாளில் புதிதாக 1,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,64,131 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 497 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,678-ல் இருந்து 5,174- ஆக உயர்ந்துள்ளது.

corona

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 567 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,20,931 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துவருவதால் தமிழக அரசு ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் மக்களுக்கும் கட்டுப்பாடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மக்களும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it