இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு?- கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா, ஒமைக்ரானால் முடிவு?
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு?- கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா, ஒமைக்ரானால் முடிவு?

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்து உள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவிவிட்டது. மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழகம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, இமாச்சல், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 27,553 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 9,249 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 284 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 801 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 1,525ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிர மாநிலத்தில், 460 பேருக்கும், டெல்லியில், 351 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 136 பேருக்கும், தமிழகத்தில், 117 பேருக்கும், கேரள மாநிலத்தில், 109 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில், 69 பேருக்கும், தெலங்கானா மாநிலத்தில், 67 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில், 64 பேருக்கும், ஹரியானா மாநிலத்தில், 63 பேருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில், 20 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 1,525 பேரில், 560 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருவது நாட்டு மக்களை அச்சமடையச் செய்துள்ளது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, ஏற்கனவே, டெல்லி, கேரளா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே கொரோனா, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முழு ஊரடங்கு அல்லாமல் அது போன்ற கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
— Ministry of Health (@MoHFW_INDIA) January 2, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/LDF4970mnU pic.twitter.com/UdWsFZVb25
newstm.in

