Theme Check

கேரளாவில் காதலியைச் சுட்டுக் கொன்றுவிட்டு, காதலனும் தற்கொலை! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கேரளாவில் காதலியைச் சுட்டுக் கொன்றுவிட்டு, காதலனும் தற்கொலை! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கேரளாவில் காதலியைச் சுட்டுக் கொன்றுவிட்டு, காதலனும் தற்கொலை! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
X

கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்தவர் பி.வி.மானசா. இவர் மருத்துவம் படித்து முடித்துவிட்டு வீடு வாடகை ஒன்று எடுத்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று ராகில் என்பவர் மானசாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, மானசாவை தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு திடீரென அந்த அறையிலிருந்து அடுத்தடுத்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து மானசாவுடன் இருந்த மற்ற மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த அறையின் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Kerala

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் மானசாவும், ராகிலும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து ராகிலின் நடத்தை பிடிக்காததால் மானசா காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகில் அடிக்கடி மானசாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில்தான் ராகில், மானசாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it