தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு! ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.34 உயர்ந்து வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4 ஆயிரத்தையும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 32 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.34 உயர்ந்து வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4 ஆயிரத்தையும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 32 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது
2020 ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது.இதனால் சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாத அளவுக்கு பவுன் விலை ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,012க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.272 உயர்ந்து, ரூ.32,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 2000 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது.
விலை இப்படி தாறுமாறாக அதிகரித்து வருவதால் இனி தங்கம் வாங்குவது சாமானிய மக்களுக்கு கனவாவே போயிடும் போல இருக்கு.
newstm.in

