Theme Check

தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 26-ம் தேதி வரை நீட்டிப்பு..!

தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 26-ம் தேதி வரை நீட்டிப்பு..!

தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 26-ம் தேதி வரை நீட்டிப்பு..!
X

தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இணையதளத்தில் சில இடர்பாடுகள் இருந்ததாகவும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால், விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் 13-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it